2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிறையிலிருந்தவாறு மகனால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வசூலித்த தந்தை கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் மகனின் கப்பப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வங்கியொன்றுக்குச் சென்ற தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.

16 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 25 வயதான சந்தேகநபர், நாடு முழுவதிலுமுள்ள பிரபல வர்த்தகர்களில் சிலருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கப்பப் பணம், கம்பஹாவிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடப்படும் பட்சத்தில் அதனை, மேற்படி கைதியின் தந்தை வங்கியிலிருந்து மீளப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தந்தையின் பெயரில் வங்கிக் கணக்குகள் பேணப்படுகின்றனவா? என்பது குறித்தும் மேற்படி கப்பம் பெறும் நடவடிக்கை தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (தரிந்து ஜயவர்தன)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X