2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இந்தப் பெண்களைக் கண்டால் சொல்லுங்க

George   / 2017 மார்ச் 06 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை ​பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரசேதத்தில், பஸ்ஸில் பயணித்த பெண்ணின் கைப்பையை திருடி, அதிலிருந்து பணம் மற்றும் கடனட்டையில் ஆடைகள் வாங்கிய சந்தேகநபர்கள் இருவரை தேடி, பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்த கைப்பையில் இருந்த 102,300 ருபாய் பணத்தை எடுத்துக்கொண்ட இந்தப் பெண்கள், அதிலிருந்த கடனட்டையை கொடுத்து, ​பொரளையிலுள்ள ஆடையகமொன்றில் 27,705 ரூபாய்க்கு ஆடைகளை கொள்வனவு ​​செய்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி முற்பகல் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரான இரண்டு பெண்களையும் கைதுசெய்ய பொது மக்களிடம், பொலிஸார் ஒத்துழைப்பு கோரியுள்ளனர்.
 
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 071 - 8591587, 077 - 7264299, 011 - 2693938, 011 - 2694019 ஆகிய இலக்கங்களை அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .