Princiya Dixci / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத் நாட்டில், சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையொன்றை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணை, அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், 400 மதுபானப் போத்தல்கள், 10 பரல்கள் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
'பைய்ஹா' என்ற இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குறித்த பெண்ணை, பல நாட்கள் இரகசியமாக அவதானித்த பின்னரே, பொதுப் பாதுகாப்பு விவகார அமைச்சு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பின்னர் இவர், தடயப் பொருட்களுடன் உரிய அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026