2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பேருவளை ஓ.ஐ.சிக்கு தொற்று உறுதி

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (ஓ.ஐ.சி) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பேருவளை சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பென்தோட்ட பாலத்துக்கருகில் நேற்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போதே, ஓ.ஐ.சிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குடும்பத்தாருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டுபிடிக்க உடனடி அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேருவளை சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .