Editorial / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் - இந்த வார்த்தை இன்று சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே மிகவும் பரிச்சயமானதும், விவாதிக்கப்படக்கூடியதும் ஆகிவிட்டது. இந்தியாவின் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது எட்டாவது சீசன் வரை ஒளிபரப்பாகியிருக்க, தெலுங்கில் கூடவே பல வெற்றிகரமான சீசன்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனிலும் பலரும் புகழ்பெற, சிலர் எதிர்மறையான தாக்கங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் மீண்டும் பேசப்படும் பெயர் தான் தேஜஸ்வி மடிவாடா.
இப்படிப்பட்ட நடிகை தேஜஸ்வி மடிவாடா, 2013-ம் ஆண்டு வெளியான “சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். சிறந்த நடிப்புத் திறனால் கவனம் பெற்ற இவர், அதன்பின் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
குறிப்பாக 2018-ம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று, ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டாலும், நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் ஏற்படுத்திய நிகழ்வுகள், அவரது படைப்புலக பயணத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படை. சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தேஜஸ்வி அளித்த கருத்துகள், இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு” என்று தொடங்கும் அவர் உரையாடல், இன்றைய சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் நிகழும் நிஜங்களை வெளிக்கொணர்கிறது. அதன்படி அவர் பேசுகையில், “பிக் பாஸ்-ல் கலந்து கொள்வது ஒரு வாய்ப்பு என எண்ணினேன். ஆனால், அது எனது வாழ்க்கையை அழித்து வைத்துவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும், அங்குள்ள சூழ்நிலை, சண்டைகள், உணர்வுப் பூர்வமான தாக்கங்கள் அனைத்தும் என் மனதை பாதித்தன.
வெளியில் வந்த பிறகு என்னைச் சந்திக்கும் மக்கள் கூட, என்னைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள். என்னை விமர்சிக்கும் ஓர் எதிர்மறையான பார்வை உருவாகிவிட்டது. 'அவள் ரீயல் லைஃப்பிலயும் அப்படித்தான் இருப்பாள் போல' என்ற எண்ணம் எழுகிறது. இப்படியான மக்கள் பார்வை தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என்னை எதிலும் சேர்க்க மனமில்லாமல் செய்கிறது” என்றார்.
இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேஜஸ்வி மடிவாடா சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளை பெறவில்லை. ஆனால், தன்னம்பிக்கையை இழக்காமல், சமூக ஊடகங்களில் தனது அழகும் திறமையும் கொண்டதாய், தொடர்ந்து பல புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்களை வெளியிட்டு வருகிறார். இணையத் தளங்களில் அவருக்கு அடங்காத ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் அவர் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன. எனினும், தன் நடிப்புத் திறனுக்கேற்ப வாய்ப்புகள் இல்லாதது, பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான் காரணம் என்று அவர் தெரிவிக்க, ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் இருவேறு கோணத்தில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ.


37 minute ago
45 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
46 minute ago
53 minute ago