Freelancer / 2023 மே 21 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதல் சந்திப்பின்போது நயன்தாரா செய்ததை விக்னேஷ் சிவன் இன்னும் மறக்கவில்லை. பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவன் பேசியது பற்றி தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியதாவது, நானும் ரவுடி தான் கதை சொல்ல நயன்தாராவை பார்க்க சென்றேன். குடிக்க உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நானோ எதுவாக இருந்தாலும் சரி மேடம் என்றேன். உடனே அவர் கிரீன் டீ கொடுத்தார். அதை தான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
எனக்கு கிரீன் டீனாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால் நயன்தாரா கொடுத்ததால் வேறு வழியில்லாமல் குடிக்க வேண்டியதாகிவிட்டது. அந்த கிரீன் டீ மாதிரி மோசம் வேறு எதுவமே இல்லை. எதிரிக்கு கூட அதை கொடுக்கக் கூடாது. நான் அந்த கிரீன் டீயை குடிப்பது போன்று நடித்து ஏமாற்றினேன். கதை சொல்லும் வேகத்தில் நான் இருந்ததால் நயன்தாரா அதை கவனிக்கவில்லை என்றார் விக்னேஷ் சிவன்.

13 minute ago
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
2 hours ago