J.A. George / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சராக தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாய்பல்லவி, தெலுங்கில் ராணாவுடன் விராட பருவம், நானியுடன் ஷியாம் சிங்க ராய் மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்,
இதில் விராட பருவம் திரைப்படத்தில் நக்ஸலைட்டாக நடிக்கிறார் சாய்பல்லவி. இந்தப்படத்தில் பொலிஸ் அதிகாரியான நாயகன் ராணாவால் சாய்பல்லவி சுட்டுக்கொல்லப்பட்டு இறப்பதாக க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாம்.
அதேபோல ஷியாம் சிங்க ராய் திரைப்படத்திலும் க்ளைமாக்ஸில் நாயகன் நானியின் மடியில் உயிர்விடும் கதாபாத்திரத்தில் தான், சாய்பல்லவி நடிக்கிறாராம்.
நிச்சயமாக சாய்பல்லவியின் ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய வருத்தம் ஏற்படும் என்பது உண்மை.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026