George / 2016 ஜனவரி 27 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பத்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
'பல வருட உழைப்பு கடின முயற்சிக்கு பிறகு தினம் தினம் செய்தியாக மாறி நிற்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட ரஜினிகாந்துக்கு, மக்கள் தந்த வெற்றியும் விருதுகளுமே அங்கிகாரமாகும்.
இது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு மட்டுமல்ல வளர்ந்து நிற்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும். அதோடு திரை உலக பாராட்டுகளையும் விருதுகளையும் தாண்டி சமூக அங்கிகாரம் கிடைக்கும்போதுதான் அந்த கலைஞன் உச்சம் பெறுகிறார்.
அந்த வகையில், உலக தமிழர்களும் இந்தியர்களும் சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் கலைஞராக உள்ள ரஜினிகாந்த் இந்திய அரசின் உயரிய பத்ம விபூஷண் விருதை பெறுவதில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமிதம் கொள்கிறது.
காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் கொடுத்து அவரை ஆசீர்வதிக்கட்டும்' என்று தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
22 minute ago
2 hours ago
Nathan Wednesday, 27 January 2016 08:56 AM
This man not suitable for this Award, this BJP Political due Tamil Nadu Election
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago