Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாராவுக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து விட்டனராம். அதற்கு நயனும் சம்மதித்துவிட விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதலாவதாக சிம்புவை காதலித்தார். எனினும் சில நாட்களில் அது முறிவடைந்தது.
இதனால் சற்றும் மனந்தளராத நயன் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார்.
மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை பெற்றோர் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .