Mayu / 2024 ஜூன் 03 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான "அதிரன்" திரைப்படத்தின் பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு 4 அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகனான முன்னணி நடிகர் சுதர்சனுடன் கதாநாயகியான சிங்கள சினிமாவின் முன்னணி கதாநாயகியான மிச்சலா தில்ஹாரா ஆகியோரும், திரைப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்களும் தொழில்நுட்பவியலார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

திரைப்படத்தின் ஆரம்ப பூஜைகளை மாணிக்க விநாயகர் ஆலய பிரதான சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் தினேஷ் கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்:- இத்திரைப்படமானது இலங்கையின் கிராமத்து சூழ்நிலையை பிரதிபலிக்கும் கதைக்களமாக அமைய இருப்பதாகவும் இத்திரைப்படமானது இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக வர இருப்பதாகவும் மேலும் இத்திரைப்படம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும், அத்துடன் இத்திரைப்படமானது நேர்த்தியான, அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து எமது நாட்டின் திரைப்படத் துறையை முன்னேற்றுவதற்காக ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று, இலங்கையின் முன்னணி நடிகரும் இந்திய திரைத்துறையில் தடம் பதித்தவருமான கதாநாயகன் சுதர்சன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், இத்திரைப்படத்தில் இலங்கையின் பல புகழ்பூத்த முன்னணி கலைஞர்களும், முன்னணி தொழில்நுட்பவியலாளர்களும் சேவையாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025