Editorial / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் படே மியான் சோட் மியான். இப்படத்தில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கினார்.
இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இப்படம் வெளியாகி ரூ.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. படம் தோல்வி அடைந்ததையடுத்து இப்படத்தில் நடித்த மானுஷி சில்லர் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது,
நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என் வாழ்க்கையில் இதைப்போல் நிறைய நடந்துள்ளது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். அதற்காக நான் கடினமாக உழைக்கவில்லை என்றில்லை. ஒரு நடிகராக, உங்கள் படங்கள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புவீர்கள். மக்கள் உங்களையும் உங்கள் படத்தையும் விரும்ப வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்கள்.
அது சாதாரணமாக நடக்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் நமது கைகளில் இல்லை. அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. இவ்வாறு கூறினார்.
49 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
9 hours ago