2025 நவம்பர் 15, சனிக்கிழமை

இலங்கை வந்தார் நடிகர் சரத்குமார்

Freelancer   / 2025 நவம்பர் 05 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான சரத்குமார், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதன்கிழமை ( 05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

​​நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) காலை   11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

​ இலங்கையின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான அவியானா சிலோன் ரிசோர்ட் – பிரைவேட் செலட்ஸ் மற்றும் அஸ்கரம்ஸ் வினது (Aviyana Ceylon Resort – Private Chalets & Ashrams) தலைவர் கலாநிதி திசர ஹேவாவசமின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சரத்குமார் வருகைதந்துள்ளார். 

  நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நடிகர் சரத்குமார், நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளார்.

​ நாட்டின் முதல் 7 நட்சத்திர ஹோட்டல் என அறியப்படும், கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவியானா சிலோன் ரிசார்ட்டுக்கு அவர்  நவம்பர் 06 ஆம் திகதியன்று விஜயம் செய்ய உள்ளார்.

​ இதைத் தவிர்த்து, அவர் கொழும்பு, காலி போன்ற முக்கியப் பிரதேசங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

​'அரசு', பேரசு ' போன்ற பல வெற்றிப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சரத்குமார், தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இலங்கை இரசிகர்கள் மத்தியிலும் பெரும் புகழைக் கொண்ட ஒரு கலைஞராவார். அவரது இந்த விஜயம், இலங்கைச் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X