George / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெரும்பாலும் ஹீரோக்கள்தான் தங்களது திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், நடிகைகளைப்பொறுத்தவரை நடித்து முடிக்கிறதோடு சரி. அதன்பிறகு அந்த திரைப்படங்கள் வெளியாகி விட்டதா? என்பதைகூட அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்த விடயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமானவராக இருக்கிறார்.
தான் நடித்து முடித்த பிறகும் அந்த திரைப்படங்களின் நிலை யைப்பற்றி ஆர்வமாக கேட்டறிந்து வருகிறார்.
குறிப்பாக, தொடரி, ரெமோ திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட அவர், இப்போது விஜய்யுடன் பைரவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனபோதும், தொடரி, ரெமோ திரைப்படங்களைப்பற்றி சம்பந்தப்பட்ட படக்குழுவிடம் அவ்வப்போது கேட்டறியும் கீர்த்தி சுரேஷ், திரைப்படம் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள். நான் தயாராக இருப்பேன் என்று தானே முன்வந்து கேட்கிறாராம்.
8 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
08 Apr 2026