Mayu / 2026 மே 20 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக மக்களின் மருத்துவத் தேவைகளை விரைவாகவும் தடையின்றியும் பூர்த்தி செய்யும் நோக்கில்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்,
ரூ. 2.90 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கிய முதலமைச்சர், திடீரென எதிர்பாராத விதமாகப் புதிய வாகனம் ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.

துவக்க விழாவின் அடையாளமாக, புதிய வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் முதலமைச்சர் நேரில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கொடியசைத்து வாகனங்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த அவர், துறையின் அடுத்தகட்ட மக்கள் நலப் பணிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

திட்ட மதிப்பு: ₹2.90 கோடி
வாகனங்களின் எண்ணிக்கை: 40 புதிய வாகனங்கள்
பயன்பெறும் துறை: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம்
நோக்கம்: கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவக் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்துதல்.
கிராமப்புறங்கள் வரை மருத்துவச் சேவைகளை இன்னும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவும், நல்வாழ்வுத் துறையின் களப்பணிகளைச் சீராகக் கண்காணிக்கவும் இந்த வாகனங்கள் பெரிதும் உறுதுணையாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் கார் ஓட்டும்போது, அந்த காருக்குள் வேறுயாருமல்ல, அவருடைய சாரதியே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
47 minute ago