George / 2017 ஜூன் 12 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று திடீரென சந்தித்துள்ளார்.
முதல்வரின் சென்னை இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், திரையுலகில் உள்ள பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்காக நடிகை வரலட்சுமி ஆரம்பித்த “சேவ் சக்தி” என்ற அமைப்பு குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.
ஏற்கெனவே நடிகை வரலட்சுமி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய மகிளா நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைகள் குறித்து அவர் முதல்வரிடம் நேரில் விளக்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025