Mayu / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர், ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி ஏப்ரல் மாதமும் இந்த படம் வெளியாவது சந்தேகம் என்று கூறப்படுகிறது

ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடிந்த பின்னர் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது டப்பிங் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு திகதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
2 hours ago