Editorial / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழில் 'உத்தம வில்லன்', 'எங்கிட்ட மோதாதே', 'நிமிர்'. 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கன்னட திரைப்படமான மிஸ்டர் ராணியில் கடைசியாக நடித்திருந்த பார்வதி நாயர், சில மாதங்களுக்குமுன்பு ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் அவர் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாதநிலையில், திருமணம் பார்வதி நாயரின் கெரியரை பாதித்து விட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்துவிடுவார்கள் என்ற கருத்தை உடைக்க வேண்டும் என்று பார்வதி நாயர் கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், "நான் இருக்கிறேன் என்று அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்துவிடுவார்கள் என்ற கருத்தை உடைக்க விரும்புகிறேன். ஆஷ்ரித் என்னை ஒருபோதும் நடிப்பை நிறுத்தச் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும். உண்மையில், நான் ஆஷ்ரித்தை மணந்ததற்கான காரணம் அதுதான் '' என்றார்.
20 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago