Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை வனிதா விஜயக்குமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை வனிதா விஜயக்குமார் முதல் கணவரான நடிகர் ஆகாஷுக்கு பிறந்த மகன் தனது அப்பாவுடன் செல்ல அவருக்கு பிறந்த மகள் மற்றும் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜனுக்கு பிறந்த பெண் குழந்தை என இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி தனது பெற்றோரின் திருமண நாள் அன்று பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி கரம் பிடித்தார் வனிதா.
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும் உள்ளார்.
இந்நிலையில் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
45 minute ago