Freelancer / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்து வருபவர். தான் உதவி செய்வதை யாரிடமும் சொல்லக் கூடாது என்பார். அதனாலேயே அவர் உதவி செய்வது யாருக்கும் தெரிய வராது
கிளாஸ்கோவில் இருந்து தமிழ் பெண் ஒருவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக சென்னைக்கு விமானத்தில் வந்திருக்கிறார். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் அஜித் குமாரை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த பெண் குழந்தையையும் பையையும் தூக்கிக் கொண்டு தனியாக வந்ததை பார்த்த அஜித் அந்த பையை வாங்கிக் கொண்டார். விமானம் வரை அந்த பையை தூக்கி வந்ததுடன் பணிப்பெண்களிடம் கொடுத்து அந்த தமிழ் பெண்ணின் இடத்தில் பையை பத்திரமாக வைக்குமாறு கூறியிருக்கிறார்.
அந்தப்பெண் விமான நிலையத்தில் அஜித் செய்த உதவியை தன் கணவரிடம் கூறியிருக்கிறார். அஜித் செய்த காரியத்தால் நெகிழ்ந்துபோன அந்த கணவர் நடந்த விஷயத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
9 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
1 hours ago