Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வியாழன் கிரகத்தில் உயிர்களைத் தேடும் பணியில் ஆய்வினை தொடங்க எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
யூரோப்பா கிளிப்பர் என்னும் இந்த திட்டத்தில், 2024 ஒக்டோபர் மாதத்தில் புளோரிடாவில் உள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் ஹெவி ராக்கெட் ஏவப்படும் என்று நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையே இதற்காக 178 மில்லியன் டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பூமியிலிருந்து 630 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவிலுள்ள யூரோப்பாவை அடைய 5 வருடங்கள் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago