2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

அக்கரப்பத்தனை தேர்த்திருவிழா…

Editorial   / 2025 ஜனவரி 28 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை நகர் ஸ்ரீ வலம் புரி சித்தி விநாயகர் ஆலயத்தில் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 20  அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம் பெற்று  28 அன்று ஆலயத்தில் விநாயகர் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம் பெற்று. 

இதனை  தொடர்ந்து. வள்ளி தெய்வானை முருகப்பெருமான் விநாயக பெருமான் ஆகிய  சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட உருவ சிலைகள் பக்தர்களால் அரோகரா கோசத்துடன் ஆலயத்தை சுற்றி  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது .

அதனை தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ  முத்தேர் பவனி இடம் பெற்றது . இதில்  அதிகமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

அத்தோடு மேள வாத்தியங்கள் முழங்க  பக்தர்கள் வடம் பிடித்து  ‌ அரோகரா கோசத்தோடுதிருவிழா சிறப்பாக இடம் பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X