2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எசல பெரஹரா இன்று ஆரம்பம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி எசல பெரஹரா,  இன்றுத் திங்கட்கிழமை (08)ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. முதலாவது கும்பல் பெரஹரா இன்று வீதி வலம் வரும் என்றும் முதலாவது ரந்தோலி பெரஹரா, எதிர்வரும் 13ஆம் திகதி வீதிவலம் வரும் என்றும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி, எசல பெரஹரா நடைபெறுவதுடன், கெட்டம்பேயில் மறுநாள் 18ஆம் திகதியன்று, இடம்பெறவுள்ள நீர்வெட்டு நிகழ்வின் பின்னர், அன்றைய தினம் இடம்பெறும் பகல் பெரஹராவுடன் இம்முறை எசல பெரஹரா முடிவுக்கு வரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .