Sudharshini / 2016 ஜூலை 10 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை நடைபெற்றது.
கடந்த முதலாம் திகதி ஆரம்பமான வருடாந்த அலங்கார உற்சவம், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றதுடன் 9ஆம் நாளான நேற்று சனிக்கிழமை (09) இரவு மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி ஏந்தல், பறவைக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெற்றன.
6 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
48 minute ago