Freelancer / 2026 மார்ச் 13 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.
இ/எம்பி/பரியோவான் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் 14ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, பாலர்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேல் பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான பூரண அனுசரணையை Vijay Electrical உரிமையாளர் திரு அர்ஜூணன் விஜயகுமார் வழங்குகின்றார்.
ஒரு பிரிவில் இருந்து 5 மாணவர்கள் அடங்களாக 4 பிரிவுகளில் இருந்தும் ஒரு அறநெறிப்பாடசாலையில் 20 மாணவர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றார்கள். மொத்தமாக 300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குபெற்ற உள்ளார்கள்.
பிரிவுகளின் அடிப்படையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசு - 10,000 ரூபாய்.
இரண்டாம் பரிசு - 7,000 ரூபாய்.
மூன்றாம் பரிசு - 5,000 ரூபாய்.
மேலும் மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. R


14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026