Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆரம்பத் திருவிழாவான கொடியேற்றம், இன்று சனிக்கிழமை (20) நடைபெற்றது. ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முனைநாதஸ்வாமிகள் தேவஸ்தானத்தின் 25 நாள், மகோற்சவமாக கொண்டாடப்படுகின்றது. 63 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், ஈழத்துக்காசியெனவும் ஈழத்தில் தோன்றிய முதல் ஈஸ்வரமாகவும் இக்கோயில் வர்ணிக்கப்படுகின்றது.
கொடியேற்றத்துக்குரிய கொடிச்சீலையானது யானையின் மீது உள்வீதி, வெளிவீதி ஊடாக பவனி வந்தபின்னர் கொடியேற்றப்பட்டது. கொடியினை பிரம்ம ஸ்ரீ இ.குமாரசுவாமி குருக்கள், பிரம்ம ஸ்ரீ எஸ். பத்மநாபகுருக்கள் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.









10 minute ago
43 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
57 minute ago
3 hours ago