Freelancer / 2023 மார்ச் 07 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 04 ஆம் திகதி சனிக்கிழமை அன்று காலை 7 .30 மணிக்கு விநாயகர் வழிபாடுகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து.ஆகுரோயா ஆற்றிலிருந்து பால்குடம் பவனி பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு மேளம் வாத்தியம் முழங்க ஆலயத்தை வந்தடைந்தது.
திருவிழாவில் 06 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்று வசந்த மண்டல பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு மும்மூர்த்திகளின் உருவ சிலைகள் ஆலயத்தில் உள்வீதி வலம் வந்து தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
துவாரக்ஷான்






8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026