2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோணேஸ்வரர் ஆலய சிவராத்திரி விழா

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.

நான்கு சாமப் பூசைகள் இடம்பெற்றதுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிசேகமும் இடம்பெற்றது. அடியார்கள் சிவலிங்கத்துக்கு தமது கைகளால் அபிசேகம் செய்தனர்.

அத்துடன் சிவராத்திரியை சிறப்பிக்குமுகமாக ஆலய முன்றிலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலட்சக்கணக்கானோர் கோணேஸ்வரத்தில் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X