2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கூழாவடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 10 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(லோஹித்)

மட்டக்களப்பு புதுமைபுரம், கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி பூஜையும் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருக்கை மகிமைப்படுத்தும் புனித விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று மாலை புனிதரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இதனைதை தொடரந்து இன்று காலை மட்டு-திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் திருப்பலி பூசைகள் இடம்பெற்றன.

புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இனாசி ஜோசப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருக்கை மகிமைப்படுத்தும் புனித விழாவின் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து திருப்பலி கூட்டுவழிபாடுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப ஆசிர்வாதம் அடியார்களுக்கு வழங்கப்பட்டு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை இனாசி ஜோசப்பினால் கொடியிறக்கம் செய்யப்பட்டது.

இதன்போது மட்டு-திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையினால் பக்தர்களுக்கு அப்பம் வழங்கப்பட்டு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X