2025 ஜூலை 05, சனிக்கிழமை

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி திருப்பலி பூஜை

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி திருப்பலி பூஜையும் இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருக்கை மகிமைப்படுத்தும் புனித விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த எட்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று மாலை புனிதரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. இந்த திருச்சொரூப பவனியில் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

இதனைதை தொடரந்து இன்று காலை மட்டு - திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் திருப்பலி பூசைகள் இடம்பெற்றன.

புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், அருட்தந்தை தேவசீலன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருக்கை மகிமைப்படுத்தும் புனித விழாவின் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து திருப்பலி கூட்டு வழிபாடுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப ஆசிர்வாதம் அடியார்களுக்கு வழங்கப்பட்டு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளாரால் கொடியிறக்கம் செய்யப்பட்டது.

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றியிட்டியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .