2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, ஏறாவூர் நான்காம் வட்டாரம் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இவ் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது கடந்த 26 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

கடந்த 10 தினங்களாக இடம்பெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் அம்மனுக்கு விசேட பூசைகள் இடம்பெற்று வந்ததுடன் தெய்வாதிகளின் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

ஆலயத்தின்; பிரதமகுரு ஆச்சாரிய தீபம், அருட்கவியரசு வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த வருடாந்த திருச்சடங்கில் வல்லிவட்டார காவல், குங்கும அர்;ச்சனை, ஆரத்தி வைபவம், அம்மன் ஊர்வலம், விசேட தீபாராதனை அன்னைக்கு விசேட நோர்ப்பு நெல்குத்துதல், விசேட சக்தி மகா யாகம் அம்மன் புனித நீராடல் என்பன இடம்பெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X