2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய தீர்த்தோற்சவம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரசேத்துக்குட்பட்ட பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றான பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் நேற்று வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த உற்சவமானது பத்து தினங்களாக வெகு விமர்சையாக இடம்பெற்றுவந்தது. காலை விசேட விநாயகர் வழிபாடுடன் கிரியைகள் ஆரம்பமாகி யாகம் மற்றும் மூல மூர்த்திக்கு அபிஷேகம் என்பன இடம்பெற்றன.

ஆலய பிரதம குரு கிரியாஜோதி சிவஸ்ரீ தேவமனோகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கொடியேற்ற உற்சவத்தில் தினமும் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி, வெளிவீதி திரு உலா என்பன இடம்பெற்றன.

கதிர்காம தீர்த்த காலத்தில் முதியவராக தோன்றிய முருகப்பெருமான் அங்கு செல்லமுடியாதவர்கள் இங்கு வருமாறு கூறிமறைந்ததாக வாய்மொழிக்கதைகள் கூறுகின்றன. நேற்று வியாழக்கிழமை காலை திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு சுவாமிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலமாக சமுத்திரத்துக்குகொண்டுசெல்லப்பட்டது.

சமுத்திரத்தில்வேலுக்கு விசேட அபிசேக பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்த உற்சவத்தினைத் தொடர்ந்து வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆலயங்களுக்கு செல்லமுடியாத அடியவர்களுக்கு வீடு தேடிச்சென்று அருட்காட்சி வழங்கினார். ஆலயத்தினை சுவாமி வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட யாகபூசை இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கடந்த 10 தினங்களாக பூசிக்கப்பட்ட கும்பம் பக்தி பூர்வமாக அடியார்களின் ஆரோகராகோசத்துடன் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த தீர்த்த உற்சவத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X