2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாண்டவன்வெளி தூயகாணிக்கை அன்னை ஆலயத்தில் புதிய திருச்சொரூபம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


இறைவனின் தாயும் முழு உலகிற்கும் தாயுமாகிய அன்னை மரியாள் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நாளை நினைவுகூர்ந்து முழு உலகமும் கொண்டாடுகின்றது.

இந்நாளை நினைவுகூரும் முகமாக மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி சி.வி.அன்னதாஸ் தலமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்னையின் விண்ணேற்பு நாளை நினைவுகூரும் முகமாக ஆலயத்தின் முன்பகுதியில் தூய காணிக்கை அன்னையின் பெரிய திருச்சொரூபம்; பங்குத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டு பக்தர்களின் வணக்கத்துக்காக திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .