2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா ஆலய வருடாந்த திருவிழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஆலய பங்குத்தந்தை ஏ.அன்னதாசினால் ஆலய வாசலிலே மெழுகு திரிகள் ஆசீர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தினுள் வந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்களான ஏ.ஜேசுதாசன், கிறைட்டன் அவுஸ்ட்கோன், ஜே.எஸ்.மோறாயஸ் ஆகியோரால் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்ததடன் ஆரம்பமான திருவிழாவில் நேற்று சனிக்கிழமை மாலை காணிக்ககை மாதாவின் திருச்சொரூப பவனி நகர் வீதிகளில் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .