Sudharshini / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஆரையம்பதி மாவிலங்குத்துறை அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தியையொட்டி; பாற்குடபவனியும் சங்காபிஷேகமும் நேற்று வெள்ளிக்கிழமை (13) சிறப்பாக நடைபெற்றது.
சிவஸ்ரீ உ.ஜெயதீஸ்வர சர்மாவின் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையினை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக ஸ்ரீமாகாளியம்மன் ஆலயம் வரை வந்தனர்.
அதனை தொடர்ந்து விஷேட ஹோம பூஜைகள் நடத்தப்பட்டதுடன் சங்கு மற்றும் மண்டாலாபிஷேக பிரதான கும்பத்துக்கும் விசேஷட பூஜைகள் நடத்தப்பட்டன.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026