Thipaan / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் இரதோற்சவ பெருவிழா, இன்று சனிக்கிழமை(08) காலை நடைபெற்றது.
இன்று இரவு, கார்த்திகை உற்சவம் பஞ்சமூர்த்தி உற்சவம் நடைபெறுவதுடன் ஞாயிற்றுக்கிழமை(09) தீர்த்த உற்சவம் நடைபெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
அத்துடன் 12ஆம் நாள் திருவிழாவாக திங்கட்கிழமை(10) மாலை 7 மணிக்கு பூங்காவனம், திருவூஞ்சல் என்பன நடைபெறவுள்ளன.
11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வைரவர் மடை இடம்பெறவுள்ளதுடன் அபிஷேக நிகழ்வு மாலை 5 மணிக்கு ஆரம்பமாவதுடன் இரவு7.30 மணிக்கு வைரவர் பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: ஷண்)






9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026