Sudharshini / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.
இதன்போது, பறவைக்காவடியுடன் பட்டெடுத்துவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதியுலாவும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து, சுவாமி வெளி வீதியில் முத்துச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தின் ஏற்பாட்டில் வடமோடிக்கூத்து நிகழ்வும் ஆலய முன்றிலில் நடாத்தப்பட்டது.
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago