2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்திப்பு…

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைவ பௌத்த நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் உலக சைவ திருச்சபையின் தலைவரும் உலக சைவ தமிழ் சங்கத்தின் ஸ்தாபகருமான தவத்திரு அடியார் விபுலாநந்தா குரு மஹா சந்நிதானம் பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

கண்டியில் உள்ள அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம் நிலை பீடாதிபதி வேண்டருவே உபாலி தேரரையும் கண்டி பய்ரவகந்த விகாரையின் விகாராதிபதி யடவத்தே தம்மாநந்த தேரரையும் கண்டி அஸ்கிரிய பீடத்தின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தயால பண்டாரவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது உலக சைவ தமிழ் சங்கத்தின் கண்டி அமைப்பாளர் வர்த்தகர் செல்லையாவும் கலந்து கொண்டார்.  (படங்களும் தகவலும்: டி.ஷங்கீதன்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .