Princiya Dixci / 2016 ஜூன் 06 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்றது.
தொடர்ந்து 16 தினங்கள் நடைபெறும் ஆலய உற்சவத்தில், எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பாலாபிசேகமும், 15ஆம் திகதி புதன்கிழமை பகல் சிவபூசையுடன், இரவு திருமஞ்சமும், 16ஆம் திகதி பகல் விசேட கருடபூசையும், 18ஆம் திகதி இரவு சப்பறத் திருவிழாவும், மறுதினமான 19ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 20ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் 21ஆம் திகதி தெப்ப உற்சவமும் இடம்பெற்று, திருவிழா நிறைவுறும்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago