2025 மே 15, வியாழக்கிழமை

பாதயாத்திரை

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,எஸ். பாக்கியநாதன்
 
நாட்டில் நிரந்தர சமாதம் ஏற்பட வேண்டி செங்கலடியில் நேற்று சனிக்கிழமை மாலை செபமாலை மாதா யாத்திரை  நடைபெற்றது.
 
மட்டக்களப்பு,தன்னாமுனை தொடக்கம் வாகரை வரையில் வாழும் கத்தோலிக்க மக்கள் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர்.
 
ஏறாவூரில் ஆரம்பமான இந்த யாத்திரை செங்கலடி நகர வீதி வழியாக செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தை வந்தடைந்து.

பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் தேவாலய பங்குத் தந்தை ஜி. மகிமைதாஸ், தன்னாமுனை மியானி நிலையப் பணிப்பாளர் எஸ். ஹிருதயதாஸ் ஆகியோர் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .