2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உரிமை கோரப்படாத சொகுசு வாகனம்

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பிரபலமான வாகன இறக்குமதி நிறுவனம், 10 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு ஜீப் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது. அதன் உரிமையாளராக சாதாரண வருமானம் பெறும் ஒருவரின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பெறுமதிவாய்ந்த இந்த வாகனத்தை அரசியல்வாதி, பணம்படைத்த வர்த்தகர் யாராவது கொள்வனவு செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக பெரும்பாலானோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் இதுவரை அந்த வாகனத்துக்கு உரிமைகோரி யாரும் வருகை தரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊடகவியலாளர்களும் அரசியல்பிரமுகர்கள் சிலரும் மிக அவதானத்துடன் கவனித்து வருகின்றனர்.
இந்த வாகனத்தை உரிமைகோரி யாரும் வருகை தரும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .