Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது.
927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள்.
1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான்.
1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.
1248 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
1261 – பைசாந்தியப் பேரரசராக எட்டாம் மைக்கேல் பலையோலோகசு கான்ஸ்டண்டினோபில்லில் முடிசூடினார்.
1281 – சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன.
1461 – திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
1483 – சிஸ்டைன் சிற்றாலயத்தை திருத்தந்தை நன்காம் சிக்ஸ்டசு புனிதப்படுத்தினார்.
1511 – போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான்.
1519 – பனாமா நகரம் நிறுவப்பட்டது.
1534 – லொயோலா இஞ்ஞாசியும் அவரது ஆறு தோழர்களும் ஆரம்ப உறுதியை எடுத்தனர். இது 1540 செப்டம்பரில் இயேசு சபை உருவாகக் காரணமானது.
1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.
1599 – ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன.
1914 – அமெரிக்கக் கட்டடக் கலைஞர் பிராங்க் லாய்டு ரைட்டின் பணியாள் ஏழு பேரைக் கொலை செய்து, ரைட்டின் விஸ்கொன்சின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.
1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
1939 – போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 போர் வானூர்திகளில் 13 தரையில் மோதி எரிந்து அழிந்தன.
1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றித் தாக்கி மூழ்கடித்தது.
1941 – யோசெப் யாக்கோப்சு என்ற ஆங்கிலேயெ இராணுவ வீரர் உளவு நடவடிக்கைகளுக்காக இலண்டன் கோபுரத்தில் வைத்து சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ சப்பான் சரணடைந்ததையும், கொரியா சப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.
1947 – இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
1947 – முகமது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.
1948 – கொரியக் குடியரசு உருவானது.
1950 – அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.
1954 – அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.
1960 – கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – இசுக்கொட்லாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1963 – மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
1974 – தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார்.
1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
1977 – ஒகைய்யோ பல்கலைக்கழகத்தினால் இயக்கப்பட்ட பிக் இயர் என்ற வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஈர்ப்பிலா வெளியில் இருந்து வானொலி சமிக்கை ஒன்றைப் பெற்றது. இந்நிகழ்வு "வாவ்! சமிக்ஞை" என அழைக்கப்பட்டது.
1984 – துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
1998 – பிரித்தானியாவில் வட அயர்லாந்து, ஓமா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர், 220 பேர் காயமடைந்தனர்.
2005 – காசாக்கரையில் இருந்தும், மேற்குக் கரையின் வடக்கேயுள்ள நான்கு இசுரேலியக் குடியேற்றங்களிலும் இருந்து இசுரேலியரை வெளியேற்றும் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.
2005 – இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30-ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.
2013 – ஒலிங்கிட்டோ என்ற புதிய புலாலுண்ணும் மிருக இனத்தை அமெரிகக் கண்டத்தில் கண்டுபிடித்திருப்பதாக சிமித்சோனிய நிறுவனம் அறிவித்தது.
2015 – வட கொரியா தனது நேரத்தை அரை மணி நேரம் பின்னோக்கி நகர்த்தியது. இது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தில்லிருந்து 8½ மணி முன்னோக்கியதாகும்.
58 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago