R.Tharaniya / 2025 ஏப்ரல் 14 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
1845: ஆஸ்திரியாவிலிருந்து பிரிவதாக ஹங்கேரி சுதந்திர பிரகடனம் செய்தது.
1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நாடக அரங்கொன்றில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
1912: பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. (மறுநாள் இக்கப்பல் மூழ்கியது)
1944: பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 300 பேர் பலி.
1979: உகண்டாவில் இடி அமீன் பதவி விலகியதையடுத்து யூசுபு லுலே ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1986: மேற்கு பேர்லினில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக லிபியா மீது குண்டுத்தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டார். இத்தாக்குதலில் 60 பேர் பலியாகினர்.
1988: ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் சோவியத் யூனியன் கையெழுத்திட்டது.
1999: அல்பேனிய அகதிகள் மீது நேட்டோ படையினர் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில் சுமார் 75 பேர் பலி.
2002: வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் 2 நாட்கள் பதவியிலிருந்து விலகியிருந்தபின் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.
2010: சீனாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் சுமார் 2700 பேர் பலி
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025