Janu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906: நவீன ஒலிம்பிக் போட்டிகளின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி விசேடஒலிம்பி போட்டியொன்று ஏதென்ஸில் ஆரம்பமானது.
1945: யூகோஸ்லாவியாவின் குரோஷிய மாநிலத்தில் தடுப்பு முகாமொன்றில் கைதிகள் கிளர்ச்சி செய்தபோது 502 பேர் பலியாகினர்.
1970: உலகின் முதல் தடவையாக பூமி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1992: மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமொன்றில் 206 பேலியாகினர்.
1997: அல்ஜீரிய கிராமமொன்றில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1997: பெரு நாட்டில் ஜப்பானிய தூதரகத்தில் 4 மாதங்களாக நீடித்த பணய நாடகத்தை தாக்குதல் மூலம் இராணுவத்தினர் முறியடித்தனர்.
2000: இரண்டாவது ஆனையிறவுச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆனையிறவு முகாம் வீழ்ந்தது. 8 வருடங்களின்பின் இம்முகாமை இலங்கை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர்.
2004: வடகொரியாவில் இரு ரயில்கள் மோதியதால் 150 பேர் பலியாகினர்.
2005: போர்க்காலத்தில் ஜப்பான் இழைத்த தவறுகளுக்காக அந்நாட்டு பிரதமர் ஜுனிசிரோ யொய்சுமி மன்னிப்பு கோரினார்.
2006: நேபாளத்தில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 206 பேர் காயமடைந்தனர்.
2010: மெக்ஸிகோ வளைகுடாவில் 'டீப் வாட்டர் ஹொரைஸன்; எண்ணெய் அகழ்வு நிலையம் வெடிப்புக்குள்ளாகி 2 நாள்களாக தீப்பற்றிய நிலையில் கடலில் மூழ்கியது.

9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026