R.Tharaniya / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
1704: அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகையான "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.
1800: அமெரிக்க காங்கிரஸ் நூலகம் நிறுவப்பட்டது.
1863: கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில், அமெரிக்கப் பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1895: உலகத்தைத் தனியாளாக, முதற்றடவையாகச் சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ், பொஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.
1908: லூசியானாவில் ஏற்பட்ட புயல் காற்றால், 143 பேர் உயிரிழந்தனர்.
1916: அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக, டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.
1955: இந்தோனேசியாவின் பண்டுங் நகரில், ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1957: ஐ.நா அமைதிப்படை வரவழைக்கப்பட்டதை அடுத்து, சுயஸ் கால்வாய், மீண்டும் திறக்கப்பட்டது.
1965: டொமினிக்கன் குடியரசில், உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1993: இந்தியாவில், பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.
2004: ஐக்கிய அமெரிக்கா, லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா, பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.
2006: நேபாளத்தில், மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து, 2002இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க, மன்னர் உத்தரவிட்டார்.
2007: பலாலி இராணுவத்தளம் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2013: பங்களாதேசின் டாக்கா நகரிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 1,129 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் காயமடைந்தனர்.
15 minute ago
20 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
30 minute ago
43 minute ago