Janu / 2024 ஏப்ரல் 26 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1942: சீனாவில் இடம்பெற்ற சுரங்க விபத்தொன்றில், 1549 பேர் உயிரிழந்தனர்.
1956: உலகின் முதலாவது கொள்கலன் கபப்லான எஸ்.எஸ். ஐடெக்ஸ் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
1960: ஏப்ரல் புரட்சியின் காரணமாக, தென்கொரிய ஜனாதிபதி சிங்மன் றீ ராஜினாமா செய்தார்.
1962: நாஸாவின் ரேஞ்சர் -4 விண்கலம் சந்திரனின் மீது மோதியது.
1963: லிபியாவில் அரசியலமைப்பு திருதத்தப்பட்டது. பெண்களும் தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.
1964: தான்கானிகா மற்றும் ஸான்ஸிபார் நாடுகள் ஒன்றிணைந்து தான்ஸானியா நாடு உருவாக்கப்பட்டது,
1986: சோவியத் யூனியனின் செர்னோபில் அணுஉலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது. உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து இதுவாகும்.
1977: தந்தை செல்வா காலமானார்.
1981: மட்டக்களப்பு, பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1982: தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986: உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989: பங்களாதேஷில் டோர்னடோ சுழல்காற்றின் காரணமாக 1300 பேர் பலியாகினர்.
1994: சீன விமானமொன்று ஜப்பானில் விபத்துக்குள்ளானதால் 271 பயணிகளில் 264 பேர் பலியாகினர்.
1994: உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.
2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026