Yuganthini / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
1792: பிரெஞ்சு மன்னன் 16 ஆம் லூயி தேசிய விசாரணை மன்றத்தினால் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்டான்.1960: சாட் நாடு பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
1961: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச்செல்வதை தடுப்பதற்காக பேர்லின் நகரத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை பிரிக்கும்விதமாக கிழக்கு ஜேர்மன் அரசாங்கம் வேலி அமைத்தது.
1969: சந்திரனிலிருந்து திரும்பிய அப்பலோ 11 விண்வெளி வீரர்கள் 3 வாரகாலம் பரிசோதிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.
1978: லெபனானின் பெய்ரூத் நகரில் சுமார் 150 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
2004: கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004: புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004: கிறீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகியது.
2006: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப், ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026