Freelancer / 2023 ஓகஸ்ட் 19 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1944: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகளிடமிருந்து பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டது.
1945: வியட்நாமில் ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
1980: சவூதி அரேபிய விமானமொன்று ரியாத் நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதால் 301 பேர் பலி.
1981: லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.
1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவின் அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி இடம்பெற்றது. கொர்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2002: செச்னிய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டர் சிக்கியதால் 118 படையினர் பலி.
2003: ஈராக்கில் ஐ.நா. தலைமையகம் மீது நடந்த கார் குண்டுத் தாக்குதலில் ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் சேர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 பேர் பலியாகினர்.
2009: ஈராக்கில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகளில் 101 பேர் பலி 565 பேர் காயம்.
15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026