R.Tharaniya / 2025 ஜூன் 29 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
1942 : இரண்டாம் உலகப் போர் - முதன் முதலாக அவுஸ்வித்ஸ் வதை முகாமில், நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து ரயிலில் அனுப்பப்பட்டனர்.
1942 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் போர் விமானம் வேல்சில் தரையிறங்கும் போது கைப்பற்றப்பட்டது.
1946 : கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1960 : பத்திரிஸ் லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 : பனிப்போர் - அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1980 : இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
1985 : அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 : பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 ஆற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010 : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
1924 : ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் பிறந்த தினம்.
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago