Janu / 2023 ஜூலை 15 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தார்.
1888: ஜப்பானில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 500 பேர் பலி.
1927: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 89 பேர் பலியாகினர்.
1955: அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனமொன்றில் நோபல்பரிசு பெற்ற 8 பேர் கையெழுத்திட்டனர்.
1974: சைப்ரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள், ஜனாதிபதி மக்காரி யோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை ஜனாதிபதியாக்கினர்.
1983: பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8பேர் கொல்லப்பட்டு 55பேர் காயமடைந்தனர்.
1991: இலங்கை எழுத்தாளர் நெல்லை க.பேரன், எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
2002: வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த 'அகமது ஷேக்' என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2003: மோஸில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
2006: டுவிட்டர் சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.

15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026