Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1091: லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.
1346: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட், ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து, பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
1448: கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம், ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1604: ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர், வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.
1610: பதின்மூன்றாம் லூயி, பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1660: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662: இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ், டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.
1800: டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1805: நெப்போலியனின் போர்கள் - ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர், நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
1806: எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக், படுகொலை செய்யப்பட்டான்.
1907: மார்க்கோனி, அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912: முதலாம் பால்க்கன் போர் - பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917: முதலாம் உலகப் போரில் ஜெர்மனி, பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1933: அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி, ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
1941: இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1961: பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965: 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966: நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில், 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1979: அன்னை தெரேசா, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995: யாழ்ப்பாணத்தை, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற, இலங்கை இராணுவத்தின் ரிவிரெச நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1998: நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில், 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2003: தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.
2006: ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.
2006: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026